ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயற்சி

ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயற்சி .புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு.குடும்ப பிரச்சனை - குழந்தைகளுடன் தாய் விபரீத முடிவு

Update: 2019-02-11 11:33 GMT
குடும்ப பிரச்சனை காரணமாக மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை நெடுங்குளத்தை சேர்ந்த பஞ்சவர்ணம், கணவர் உயிரிழந்த நிலையில், தனது தந்தையின் வீட்டில் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். அவரது சொந்த சகோதர்களே வீட்டை விட்டு விரட்டியதாக பஞ்சவர்ணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படாததால், ஆட்சியர் அலுவலகம் முன்பு, குழந்தைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி பஞ்சவர்ணம் தீ குளிக்க முயற்சித்துள்ளார். அவரை தடுத்த காவல் துறையினர், தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்