வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2000

தமிழகத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படும் என சட்டப்பேரவையில், 110வது விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

Update: 2019-02-11 07:51 GMT
* கஜா புயல் மற்றும் வறட்சி பாதிப்பை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இந்த சிறப்பு நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

* அதன்படி விவசாய தொழிலாளர்கள், பட்டாசு தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், சலவைத் தொழிலில் ஈடுபடுவோர் என வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பிரிவினருக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். 

* இதன் மூலம் 60 லட்சம் குடும்பங்கள் பயன் பெறும் என்றும், இந்த சிறப்பு நிதி வழங்குவதற்காக 1200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி சட்டப்பேரவையில் அறிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்