வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை பிடிபட்டது : சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்

நீலகிரி மாவட்டத்தில் வீட்டிற்குள் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்திய சிறுத்தையை, கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்துள்ளனர்.

Update: 2019-02-06 12:02 GMT
நீலகிரி மாவட்டத்தில் வீட்டிற்குள் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்திய சிறுத்தையை, கூண்டு வைத்து வனத்துறையினர்  பிடித்துள்ளனர். பந்தலூர் தாலுகா கைவட்டா கிராமத்தில் வசிக்கும் ராயன் என்பவர் வீட்டின் கட்டிலுக்கு அடியே, சிறுத்தை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டை பூட்டிவிட்டு, வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று இரவு சிறுத்தையை  மயக்க மருந்து செலுத்தி, கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்தனர். சிறுத்தையின் உடலில் சிறு காயங்கள் காணப்பட்டதால், அதற்கு கால்நடை மருந்துவர் மனோகரன் தலைமையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்