விவசாய இயந்திரங்களை வாடகைக்கு எடுக்க செயலி : முதலமைச்சர் பழனிசாமி தொடக்கி வைத்தார்

விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் இயந்திரங்கள் வழங்க தயாரிக்கப்பட்ட உழவன் செயலியை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

Update: 2019-02-06 04:51 GMT
விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் இயந்திரங்கள் வழங்க தயாரிக்கப்பட்ட உழவன் செயலியை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உழவன் செயலி சேவை தொடங்கப்பட்டதன் மூலம், விவசாய இயந்திரங்களை வாடகைக்கு எடுக்க விரும்புவோர் தங்களுக்கு தேவையான பண்ணை இயந்திரம் யாரிடம் உள்ளது, எப்போது கிடைக்கும் என்ற விவரங்களை அறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்