காதல் திருமண தம்பதி தற்கொலை முயற்சி

ஒசூர் அருகே குடும்பத் தகராறில், உடலில் தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்த காதல் தம்பதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2019-02-04 04:40 GMT
ஒசூர் அருகே குடும்பத் தகராறில், உடலில் தீ வைத்து  தற்கொலைக்கு முயற்சித்த காதல் தம்பதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த பழனிசாமியும், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அப்துல் ரஷித் என்பவரின் மகள் பாணுவும் ஈரோட்டில் ஒன்றாக வேலை செய்தபோது காதலித்துள்ளனர். கடந்த 5 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்ட இவர்கள், ஒசூர் அருகே அஞ்செட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர். இந்த நிலையில் நேற்று பழனிசாமிக்கும் அவரின் மனைவி பானுவிற்கும் தகராறு ஏற்பட்டு இருவரும் உடல்களில் மண்ணெண்ணைய் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்