அண்ணா பட்டு கூட்டுறவு சங்க முறைகேடு புகார் எதிரொலி: மேலாண் இயக்குநர் பிரகாசம் தற்காலிக பணியிடை நீக்கம்

காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்க முறைகேடு புகார் எதிரொலியாக, அச்சங்கத்தின் மேலாண்மை இயக்குநர் பிரகாசம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2019-02-01 20:32 GMT
காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்க முறைகேடு புகார் எதிரொலியாக, அச்சங்கத்தின் மேலாண்மை இயக்குநர் பிரகாசம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் காந்தி சாலையில் செயல்பட்டு வரும், அறிஞர் அண்ணா கூட்டுறவு சங்கத்தில், நிர்வாக குழு முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில், கூட்டுறவு சங்கத்தின் மேலாண்மை இயக்குனர் பிரகாசம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து, தற்காலிக மேலாண் இயக்குனராக காஞ்சிபுரம் தமிழ்நாடு ஜரிகை ஆலை நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்