வடசென்னை அனல் மின்நிலையத்தில் கொதிகலன் பழுது

810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

Update: 2019-01-19 13:37 GMT
வட சென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. முதலாம் நிலையில் 210 மெகாவாட் மற்றும்  இரண்டாவது நிலையில் 600 மெகாவாட்  மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. குழாயில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்கும் பணிகளில் மின்வாரிய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால் விரைவில் மின் உற்பத்தி தொடங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அனல் மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்