சென்னை கடற்கரைகளில் மலைபோல் குவிந்த குப்பை

சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்து, மாநகராட்சி ஊழியர்கள் 12 டன் குப்பைகளை ஒரே இரவில் அகற்றியுள்ளனர்.

Update: 2019-01-18 07:42 GMT
சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்து, மாநகராட்சி ஊழியர்கள் 12 டன் குப்பைகளை ஒரே இரவில் அகற்றியுள்ளனர். காணும் பொங்கலை கொண்டாடும் விதமாக சென்னையை சுற்றியுள்ள மக்கள் , தங்களது உறவினர்களுடன் கடற்கரைகளில் குவிந்தனர். இதனால், மெரீனா, பேசன் நகர் கடற்கரைகளில், குப்பைகள் குவிந்தன. கடற்கரையை சுத்தமாக வைத்திருக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மாநகராட்சியின் அறிவுரைப்படி இரவு முதலே சுமார் 200 ஊழியர்கள் ஒன்றிணைந்து குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இன்று காலை 9 மணி வரை தொடர்ந்த இந்த பணியில், 12 டன் அளவிலான குப்பைகள் அகற்றப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்