உய்யக்கொண்டான் ஆற்றில் 2 முதலைகள்

திருச்சி மாவட்டம் இனியானூர் பகுதியில் உள்ள உய்யக்கொண்டான் ஆற்றில் உலவும் 2 முதலைகளை உடனடியாக பிடித்து வெளியேற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-01-17 21:07 GMT
திருச்சி மாவட்டம் இனியானூர் பகுதியில் உள்ள உய்யக்கொண்டான் ஆற்றில் உலவும் 2 முதலைகளை உடனடியாக பிடித்து வெளியேற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆற்றுக்குள் முதலைகள் இருக்கும் தகவல் தீயாய் பரவியதில், சுற்றுப் பகுதி மக்கள் அங்கு திரண்டனர். இதனால், வாய்க்காலை ஒட்டியுள்ள வயல்களுக்கு செல்ல முடியாமல் தவிப்பதாக கூறிய விவசாயிகள், காவிரியில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது முதலைகள் வந்திருக்கலாம் எனவும், உடனடியாக அவற்றை பிடித்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். 
Tags:    

மேலும் செய்திகள்