சாலையில் உலா வந்த கரடி : அச்சத்தில் வாகன ஓட்டிகள்

நீலகிரி மாவட்டத்தில் சாலையில் உலா வந்த கரடியால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

Update: 2019-01-10 11:35 GMT
நீலகிரி மாவட்டத்தில் சாலையில் உலா வந்த கரடியால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் மஞ்சூர்  கோத்தகிரி பகுதியில் சமீப காலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் கரடி ஒன்று சாலையில் உலா வரும் காட்சி பொதுமக்களை அச்சப்படுத்தி உள்ளது. கரடி சாலையை கடப்பதை பார்த்த வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு அதனை புகைப்படம் எடுத்தனர். அதன்பிறகு அந்த கரடி வனப்பகுதிக்குள் சென்றது. 
Tags:    

மேலும் செய்திகள்