பாரதிய ஜனதாவை சாடிய ப. சிதம்பரம்

அச்சம் இல்லாத இந்தியா உண்மையான ஜனநாயகம் என்றும், அதுவே மக்களுக்கு பயன் தரும் என்றும் முன்னாள மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-05 23:43 GMT
அச்சம் இல்லாத இந்தியா உண்மையான ஜனநாயகம் என்றும், அதுவே மக்களுக்கு பயன் தரும் என்றும் முன்னாள மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற மிலாதுநபி நிகழ்ச்சியில் பேசிய அவர், ஜனநாயகம் தவறானவர்கள் கையில் சிக்கினால், குரங்கு கையில் சிக்கிய பூ மாலையாக அது மாறிவிடும் என்றார்.  இந்தியாவில் தற்போது முளைத்துள்ள ஒரு கூட்டம்  மக்கள் இடையே பகையை வளர்ப்பதாகவும் ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார்.  ஜி.எஸ்.டி. விவகாரத்தில் 18 சதவீதத்திற்குமேல் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கூறியபோது, அதை முட்டாள்தனம் என்று விமர்சித்த பாரதிய ஜனதா, தற்போது அதே முட்டாள்தனத்தை செய்வதாக சாடினார்.
Tags:    

மேலும் செய்திகள்