சாத்தூர் விவகாரம் : ரத்த தானம் செய்த இளைஞரின் உடற்கூறு ஆய்வு

ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டதாக எழுந்த பிரச்சினையால் மரணமடைந்த இளைஞருக்கு உடற்கூறு ஆய்வு செய்யும் பணி மதுரையில் நடக்கிறது.

Update: 2019-01-02 13:15 GMT
சாத்தூர் பெண்ணுக்கு ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் ரத்த தானம் செய்த இளைஞர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் உயிரிழந்த இளைஞரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், எனவே வெளிமாவட்ட மருத்துவர்கள் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என அவரது குடும்பத்தினர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி 2 பேர் கொண்ட மருத்துவ குழுவை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இளைஞரின் சடலத்தை உடற்கூறு ஆய்வு செய்ய தேனி மருத்துவ கல்லூரியை சேர்ந்த இரண்டு பேராசிரியர்களை கொண்ட சிறப்பு மருத்துவ குழு மதுரை வந்தது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பேராசிரியர் முன்னிலையில் வீடியோ பதிவுடன் உடற்கூறு ஆய்வு நடைபெற்று வருகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்