மலைப்பகுதி பள்ளிகளை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்

உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-30 01:58 GMT
மலைப்பகுதியில் இயங்கும் அரசுப் பள்ளிகள் மீது தனி கவனம் செலுத்தி, அப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டம் வத்தல்மலை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியை  அவர் துவக்கி வைத்தார். அதில் பேசிய அமைச்சர் அன்பழகன், இடைநிற்றலை தவிர்க்க பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதால், உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்