அரசு தொடர்ந்து எங்களை அவமதிக்கிறது - ராபர்ட், இடைநிலை ஆசிரியர் சங்கம்

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2018-12-29 11:32 GMT
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில், கடந்த ஆறு நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்களுக்கு ஏதோனும் விபரீதம் ஏற்பட்டால் அரசு தான் காரணம் என இடைநிலை ஆசிரியர் சங்க பொதுசெயலாளர் ராபர்ட் தெரிவித்துள்ளார். போராட்டம் நடைபெறும் இடத்தில், விஷப் பூச்சிகள் அதிக அளவு காணப்படுவதாகவும் தங்களின் கோரிக்கையை நிறைவேற்றி உண்ணாவிரதத்தை அரசு முடித்து வைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்