உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு முகாம் திட்டத்திற்கு மூடுவிழா?

பத்து மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்காக, தமிழக அரசு சார்பில் தொடங்கப்பட்ட உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு முகாம், இந்த ஆண்டு ஏன் இன்னும் நடத்தப்படவில்லை என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Update: 2018-12-13 10:01 GMT
பத்து மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை முடிக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை அளிக்கும் திட்டம் கடந்த ஆண்டில் தொடங்கப்பட்டது.  மாநிலம் முழுவதும் முகாம்கள் அமைத்து, பல்துறை நிபுணர்கள் மூலம் மாணவர்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்குவதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இதனிடையே கடந்த ஆண்டில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட இந்த முகாம், நடப்பாண்டில் இன்னும் நடத்தப்படவில்லை.  பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள்ளாக நடைபெற வேண்டிய இந்த முகாம் இதுவரை ஏன் நடத்தப்படவில்லை என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்