ரூ 18,000 லஞ்சம் - பொதுபணித்துறை உதவி பொறியாளர் கைது
அரியலூரில், 18 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்
அரியலூரில், 18 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். மருதையாறு வடிநில கோட்டத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வருபவர், மணிமாறன். இவர் ஏரி ஆழப்படுத்துதல் பணிக்கு ஒப்பந்த தொகையாக 18 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்க தமிழ்வேல் என்பவரிடம் 18 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில் தமிழ்வேல் மற்றும் ஓட்டுனர் சக்திவேலை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர்.