அரசு மருத்துவர் வேலைநிறுத்தம் மனு : அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

அரசு மருத்துவர் வேலைநிறுத்தம் தொடர்பான மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

Update: 2018-12-04 07:33 GMT
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் 18 ஆயிரத்து 600 அரசு மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு தடை விதிக்க கோரி, உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்திய நாராயண், ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு முன்பு, வாராகி என்பவர் தரப்பில் முறையிடப்பட்டது. அத்தியாவசிய சேவையாக மருத்துவச் சேவை இருப்பதால், தடை விதிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் 'எஸ்மா', 'டெஸ்மா' சட்டத்தின் கீழ் அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக தெரிவித்த நீதிபதிகள், அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தனர். இது தொடர்பாக மனு தாக்கல் செய்தால், விசாரணைக்கு எடுத்து கொள்வதாகவும் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்