தேனி : மாணவர்களுக்கு விலையில்லா வழங்கினார் பன்னீர்செல்வம்
தேனியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் 20 ஆயிரத்து 895 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.
தேனியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் 20 ஆயிரத்து 895 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. விழாவில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். பின்னர் பேசிய அவர், 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேனி மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவ மாணவிகளுக்கு தங்க பதக்கம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.