வறண்டு கிடக்கும் கோயில் பொற்றாமரை குளம் - தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

வறண்டு கிடக்கும் கோயில் பொற்றாமரை குளம் - தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

Update: 2018-12-02 10:31 GMT
சாரங்கபாணி கோவிலுக்கு சொந்தமான  பொற்றாமரைக் குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம். இதேபோல், மகாமக திருவிழாவின்போது பக்தர்கள் இந்தக் குளத்திலும் புனித நீராடுவார்கள்.  ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் குளம் வறண்டு கிடக்கிறது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பழமையான கோயில் குளத்தில் தண்ணீர் நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்