புயலால் அழிந்த மரங்களை மீட்டெடுக்க முயற்சி...
புதுக்கோட்டையில் கஜா புயலால் லட்சக்கணக்கான மரங்கள் அழிந்த நிலையில், தற்போது மரக்கன்றுகளை நடும் பணியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கஜா புயலின் தாக்குதலால் புதுக்கோட்டை மாவட்டத்தின் சாலையோரத்தில் இருந்த பல லட்சக்கணக்கான மரங்கள் அடியோடு சரிந்தன. சாய்ந்த மரங்களை அகற்றும் பணி நிறைவடைந்த நிலையில், சாலையோரம் மரங்கன்றுகளை நடும் பணியில் பள்ளி மாணவ மாணவிகள் ஈடுபட்டு வருகின்றனர். மரங்கன்றுகளை நடுவதோடு அவற்றை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களின் இந்த முயற்சியை பொதுமக்கள் மகிழ்ச்சியோடு பாராட்டி வருகின்றனர்.