தீவிரவாத தாக்குதலில் ராணுவ வீரர் பலி : சோகத்தில் மூழ்கிய கரிசல்பட்டி கிராமம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத தாக்குதலில், மதுரை மாவட்டம், கரிசல்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் சரவணன் வீர மரணமடைந்தார்.

Update: 2018-12-01 07:57 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத தாக்குதலில், மதுரை மாவட்டம், கரிசல்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் சரவணன் வீர மரணமடைந்தார். 2003-ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த சரவணனனுக்கு, பாண்டி மீனா என்ற மனைவியும், அருந்ததி ராய் என்ற 11 வயது மகளும் உள்ளனர். கணவரை இழந்த சோகத்தில் தவிக்கும் பாண்டி மீனா, மத்திய, மாநில அரசுகள் தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சரவணனின் இறப்பால் கரிசல்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்