மேகதாது அணை வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி - தினகரன் கண்டனம்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட, கர்நாடக அரசு வரைவு அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக, அமமுக துணை பொது செயலாளர் தினகரன் கூறியுள்ளார்.

Update: 2018-11-27 10:56 GMT
* காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட, கர்நாடக அரசு வரைவு அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக, அமமுக துணை பொது செயலாளர் தினகரன் கூறியுள்ளார். 

* இது குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுள்ள நிலையிலும், உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலும், மத்திய சுற்றுச் சூழல் துறை அனுமதி அளித்திருப்பது மிகப் பெரிய அநீதி என அவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வரும் சூழலில், முதலமைச்சர் பழனிசாமி எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது கண்டனத்திற்குரியது என தினகரன் கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்