பள்ளி புத்தகங்கள் தயாராக உள்ளது : யார் கேட்டாலும் வழங்கப்படும் - செங்கோட்டையன்

கஜா புயல் காரணமாக, தஞ்சை மாவட்டத்தில் குழந்தைகளின் பள்ளி புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன.

Update: 2018-11-24 09:50 GMT
கஜா புயல் காரணமாக, தஞ்சை மாவட்டத்தில் குழந்தைகளின் பள்ளி புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. அங்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு, இரண்டு நாட்களாகியும் பல இடங்களில் மாணவர்களுக்கு புத்தகம் கிடைக்கவில்லை என்று  கூறப்படுகிறது. இந்நிலையில், தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களுக்கும், புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார். புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், யார் கேட்டாலும் உடனடியாக வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்
Tags:    

மேலும் செய்திகள்