விருப்பத்திற்கு இணங்காததால் ஆத்திரம் : கள்ளக்காதலியை வெட்டிக் கொலை செய்த நபர் கைது

மதுரை அருகே விருப்பத்திற்கு இணங்க மறுத்த கள்ளக்காதலியை வெட்டி படுகொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-11-21 12:17 GMT
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பேய்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி ஜோதி ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்த பெரியசாமி என்பவரோடு ஜோதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் தொடர்பை அறிந்த உறவினர்கள் இருவரையும் கண்டித்துள்ளனர். இந்த நிலையில் ஆடு மாடுகளுக்கு தீவனம் அறுப்பதற்காக வயலுக்கு சென்ற ஜோதியிடம் பெரியசாமி ஆசைக்கு இணங்குமாறு தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரத்தில் அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் பெரியசாமியை கைது செய்தனர்

Tags:    

மேலும் செய்திகள்