சிவன் கோவிலில் 2 ஐம்பொன் சிலைகள் கொள்ளை

ஆரணி அருகே சிவன் கோவிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

Update: 2018-11-15 10:22 GMT
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த வெள்ளேரி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த சோமநாதஸ்வரர் கோவிலுக்குள் மர்ம நபர்கள் நேற்று இரவு நுழைந்துள்ளனர். கருவறையை கதவுகளை கடப்பாரையால் உடைத்து, பல லட்ச ரூபாய் மதிப்பிலான சோமநாதஸ்வரர் மற்றும் குங்கும நாயகி அம்மன் ஆகிய 2 ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும், அங்கிருந்த 2 கிராம் எடையிலான தங்க மாங்கல்யம், வெள்ளி நெற்றி பட்டை, 4 கோபுர கலசம் ஆகியவற்றையும் கொள்ளையடித்துள்ளனர். இது குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்