மதுரையில் கடந்த ஒரு மாதத்தில் 14 கொலை..!

சென்னையை தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட ரவுடிகள் ஒன்றிணைந்து மதுரையில் பிறந்த நாள் கொண்டாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-11-14 05:01 GMT
மதுரை விளாங்குடியில் இருந்து சமயநல்லூர் செல்லும் வழியில் உள்ள தனியார் மதுபான விடுதியில் திமுக பிரமுகர் சோலை ரவியின் பிறந்த நாள் கொண்டாட்டம் நேற்று நடந்தது. அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ரவுடிகள் ஒன்றிணைந்து பிறந்தநாள் கொண்டாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனை தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட போலீசார் தனியார் விடுதியை சுற்றி வளைத்தபோது, 50க்கும் மேற்பட்ட ரவுடிகள் நாலாபக்கமும் தெறித்து ஓடியுள்ளனர். அவர்களில் 20க்கும் மேற்பட்ட ரவுடிகளை போலீசார் பிடித்து செல்லூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மதுரையில் கடந்த ஒரு மாதத்தில்  தொடர்ச்சியாக 14 - க்கு மேற்பட்ட கொலைகள் நடந்த நிலையில் ரவுடிகள் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டது, மக்களிடம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்