சேலம் சிறுமி கொலை விவகாரம் : முதலமைச்சருடன் திருமாவளவன் சந்திப்பு

சேலம் சிறுமி கொலை விவகாரம் தொடர்பாக, அந்த சிறுமியின் பெற்றோருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார்.

Update: 2018-11-12 14:10 GMT
சேலம் சிறுமி கொலை விவகாரம் தொடர்பாக, அந்த சிறுமியின் பெற்றோருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். சென்னை கிரீன்வேஸ்சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் இந்த சந்​திப்பு நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், சிறுமியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் வீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை  வைத்ததாக தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்