மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு இளைஞர் உயிரிழப்பு
மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த அருண் என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த அருண் என்ற இளைஞர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியை சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. மேலும், பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்தார். டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழக மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.