நிர்மலா தேவி வழக்கு - நவ. 8-க்கு ஒத்திவைப்பு
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி முருகன், கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கில் எந்தெந்த பிரிவுகளில் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன என்பதை மூவரிடமும், அரசு தரப்பு வழக்கறிஞர் விளக்கினர். மேலும் குற்றங்களை விளக்கமாக அளிப்பதற்காக அரசு தரப்பிலிருந்து நேரம் கேட்டுக்கொண்டதையடுத்து, விசாரணை வரும் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.