தனியார் பேருந்தில் ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள்

ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்துகளில் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் செய்து வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Update: 2018-11-02 18:31 GMT
பெங்களூர் - தேசிய நெடுஞ்சாலையில் சென்ற தனியார் பேருந்தில் கல்லூரி மாணவர்கள் பேருந்தின் வாசல்படியில் ஆபத்தாக தொங்கியபடி பயணம் செய்தனர். ஒசூர் பகுதியில் இதுபோல் நடக்கும் தொடர் விதிமீறல்களால் அதிகம் விபத்துகள் நடப்பதாக கூறப்படுகிறது. எனவே இதுபோன்ற பயணங்களை கண்காணித்து விபத்துகள் நடைபெறாமல்  தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்