தேவர் குருபூஜையின் போது பேனர்கள் கிழிக்கப்பட்ட விவகாரம் : அமமுகவை சேர்ந்த 21 பேருக்கு முன்ஜாமின்

பசும்பொன்னில் நடந்த தேவர் குருபூஜையின் போது பேனர்கள் கிழிக்கப்பட்ட விவகாரத்தில் அமமுக நிர்வாகிகள் 21 பேருக்கு முன்ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-11-02 15:40 GMT
கடந்த 30ஆம் தேதி நடந்த விழாவின் போது முதலமைச்சரை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டதையடுத்து அமமுகவை சேர்ந்த 21 பேர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து அவர்கள் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், அ ம மு க நிர்வாகிகளுக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்