சிங்கப்பூருக்கு அமெரிக்க டாலர் கடத்த முயன்ற இருவர் கைது

மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற அமெரிக்க டாலர் உள்பட 1 கோடியே 20 லட்ச ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

Update: 2018-10-23 07:35 GMT
மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற அமெரிக்க டாலர் உள்பட 1 கோடியே 20 லட்ச ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, மதுரை விமான நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.  அப்போது, மதுரையை சேர்ந்த ரபிக் ராஜா என்பவர், அட்டை பெட்டியில் மறைத்து கொண்டு வந்த, வெளிநாட்டு டாலர்கள் உட்பட சுமார் 89 லட்சத்து 12 ஆயிரம் ருபாய் கைப்பற்றப்பட்டது. இதேபோல் சென்னையை சேர்ந்த பிரேம் நசிர் என்பவர் அட்டை பெட்டியில் நூதனமாக கடத்தி வந்த 30 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்