திருச்சியில் நடந்த விநோத நிகழ்வு : டீசல் பெற கடன் வழங்கும் மேளா

திருச்சியில் வாகனங்களுக்கு டீசல் பெற கடன் வழங்கும் நிகழ்வில் ஏராளமான வாகன ஓட்டிகள் கலந்து கொண்டது சுவாரசியத்தை ஏற்படுத்தியது.

Update: 2018-10-11 14:44 GMT
* நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் திருச்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்று டீசல் பெற கடன் வழங்கும் மேளாவை நடத்தியது. வாகனங்களுக்காக நிதி வழங்கும் அந்த நிறுவனம் தங்களிடம் வாங்கும் வாகனங்களுக்கு டீசல் நிரப்ப கடன் வழங்குவதாக அறிவித்தது. 

* இதனை பெட்ரோலிய நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்துவதாகவும் அறிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட பெட்ரோல் பங்குகளில் டீசல் நிரப்பும் போது ஒரு லிட்டர் டீசலுக்கு 85 காசுகளை திரும்ப வழங்கும் முறையும் அறிவிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், வாகன உரிமையாளர்கள் என ஏராளமானோர் குவிந்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்