போலி அரசு முத்திரைகள் தயாரித்த 3 பேர் கைது

போலி அரசு முத்திரைகள் தயாரித்த மூன்று பேரை திருவண்ணாமலை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-10-10 22:16 GMT
திருவண்ணாமலையில் போலி அரசு அலுவலக முத்திரைகள் தயாரிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதனை அடுத்து, மாவட்ட நீதிபதி மகிழேந்தி மற்றும் சார்பு நீதிபதி ராஜ்மோகன் ஆகியோர் திண்டிவனம் சாலையில் உள்ள ஜெராக்ஸ் கடைகள் மற்றும் ரப்பர் முத்திரைகள் தயாரிக்கும் கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.அப்போது, மாவட்ட ஆட்சியரின் முத்திரை, மாவட்ட நீதிமன்றத்தின் முத்திரை, சார்பு நீதிபதிகளின் முத்திரை உள்ளிட்ட பல்வேறு அரசு முத்திரைகள் போலியாக தாயாரித்து வந்தது தெரியவந்தது இதனை அடுத்து கடை உரிமையாளர்கள் கதிரேசன், கணேசன் மற்றும் டெல்லிபாலாஜி ஆகிய முன்று பேரையும் கைது செய்யுமாறு நீதிபதிகள் போலீசாருக்கு உத்தரவிட்டனர். அவர்கள் மூன்று பேரையும் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்