ஹவாலா பணத்தை மறைத்து வைத்து நாடகம் - மனைவியுடன் இளைஞரை கைது செய்தது போலீஸ்

ஹவாலா பணத்தை வழிப்பறி கும்பல் பறித்து சென்றதாக நாடகமாடிய இளைஞரை, அவரது மனைவியுடன் காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2018-10-08 08:05 GMT
சென்னை தாம்பரம் அருகே ஹவாலா பணத்தை வழிப்பறி கும்பல் பறித்து சென்றதாக நாடகமாடிய இளைஞரை, அவரது மனைவியுடன் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மறைத்து வைத்திருந்த 53 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான முகமது அன்சாரி ராஜா மற்றும் அவரது மனைவி ஆர்த்திகாவிடம் ஹவாலா பணம் கடத்தல் பின்னணி குறித்து பீர்க்கன்காரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்