அரசு அதிகாரி அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அரசு அதிகாரி ஒருவர் அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-10-01 08:38 GMT
* திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அரசு அதிகாரி ஒருவர் அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேரங்குளம் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர்,  மன்னார்குடி அருகே வள்ளுவர் துணை மேலாண்மை விரிவாக்க மைய கிடங்கு மேலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இன்று காலை  மைய கிடங்கு அலுவலகத்தில் தூக்கிட்ட நிலையில் முருகேசன் இறந்து கிடந்தார். 

* தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருமக்கோட்டை போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் முருகேசனின் மரணம் தற்கொலையா, கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்