ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எங்கிருந்தார்..? தினகரனுக்கு, ஓ. பன்னீர் செல்வம் கேள்வி

ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, டி.டிவி. தினகரன் எங்கிருந்தார் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2018-09-25 17:40 GMT
ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது,  டி.டிவி. தினகரன் எங்கிருந்தார் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பி உள்ளார். தேனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், ஜெயலலிதாவை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்குமாறு அப்பலோ மருத்துவமனை நிர்வாகத்திடம் தான் தெரிவித்தாகவும் ஓ. பன்னீர் செல்வம் விளக்கம் அளித்தார்.இதுபோல, இலங்கையில் போர் நடந்தபோது, அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கடிதம் எழுதியதாகவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மூலமாக பிரபாகரன் அனுப்பிய அந்த கடிதத்தை கருணாநிதி கண்டுகொள்ளவில்லை எனவும் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்