"வெளிநாட்டுக்கு செல்ல சோபியாவுக்கு தடை இல்லை" - சோபியா தரப்பு வழக்கறிஞர்

மாணவி சோபியாவின் தந்தை அளித்த புகார் மனு மீது, நெல்லை மாவட்டத்தில் உள்ள மாநில மனித உரிமை ஆணைய அலுவலகத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.

Update: 2018-09-24 09:50 GMT
மாணவி சோபியாவின் தந்தை அளித்த புகார் மனு மீது, நெல்லை மாவட்டத்தில் உள்ள மாநில மனித உரிமை ஆணைய அலுவலகத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. மாணவி சோபியாவும் அவரின் தந்தையும் ஆஜராகினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் அதிசயகுமார், மாணவி சோபியா, வெளிநாட்டுக்கு செல்ல எவ்வித தடையும் இல்லை என மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் போலீசார் உறுதி அளித்ததாக தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்