சமூக வலைதளத்தில் அமைச்சர் மீது தவறான விமர்சனம் - கரூரை சேர்ந்தவர் கைது

போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சமூக வலைதளத்தில் தவறாக கருத்து தெரிவித்ததாக கரூரை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-09-22 21:53 GMT
போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது,  சமூக வலைதளத்தில் தவறாக கருத்து தெரிவித்ததாக, கரூரை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். கல்குவாரி உரிமையாளர்களுக்கும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கும்  தொடர்பு இருப்பதாக ஆனந்தகுமார் சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கண்ணன் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆனந்தகுமார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்