குடிபோதையில் காருக்கு தீ வைத்த நபர் : பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் போதை தலைக்கேறிய நபர் ஒருவர் நள்ளிரவில் காருக்கு தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-09-22 07:59 GMT
மணப்பாறை அழகர்சாமி கோவில் தெருவை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீப்பற்றி எரிந்த‌தை தொடர்ந்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரித்த போது, தோப்புப்பட்டியை சேர்ந்த தாஜ் என்பவர் காருக்கு மட்டுமல்லாமல், வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளுக்கும் தீவைத்த‌து தெரியவந்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்