குடும்ப தகராறு : கணவன் கண்முன்னே மனைவி தீக்குளிப்பு

நெல்லை மாவட்டத்தில் குடும்பத்தகராறில் கணவர் கண் முன்னே மனைவி தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-09-19 03:50 GMT
சேர்ந்தமரம் அருகே உள்ள ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்த ஆனந்த், சாந்தி தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் நகை ஒன்று காணாமல் போனது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தகராறு முற்றியதால், சாந்தி தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். 

மனைவியை காப்பற்ற ஆனந்த் முயற்சித்த போதும், தீ உடல் முழுவதும் பற்றி எரிந்ததில் சாந்தி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.  படுகாயம் அடைந்த ஆனந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து சேர்ந்தமரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்