5 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை - போக்ஸோ சட்டத்தின் கீழ் இரண்டு முதியவர்கள் கைது
தேனி: 5 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜீவமணி மற்றும் ராசு என்ற இரு முதியவர்களை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்
தேனி மாவட்டம் கம்பம் அருகே 5 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜீவமணி மற்றும் ராசு என்ற இரு முதியவர்களை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
இருவரும் இவர்களின் வீட்டின் அருகே இருந்த குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதை அறிந்த குழந்தையின் தாயார் அளித்த புகாரின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.