சேலம் ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற இளைஞர்கள்

சேலத்தில் தனியார் நிறுவனம் ஒன்று பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-09-17 13:32 GMT
சேலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட தனியார் நிறுவனம் ஒன்று பாதி விலையில் மளிகை பொருட்கள் இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஏராளமான பொதுமக்கள் பணம் செலுத்திய நிலையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தியதால் போலீஸில் பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர். 

இதையடுத்து சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க அவர்கள் வந்தபோது இளைஞர்கள்  இருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அழைத்துச் சென்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்