படகை காப்பாற்றுவதே பெரிய விஷயமாக உள்ளதாக ராமேஸ்வரம் மீனவர்கள் கதறல்
கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது படகு மீது இலங்கை கடற்படையினர் கப்பலை மோதி விரட்டியுள்ளனர்.
கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது படகு மீது இலங்கை கடற்படையினர் கப்பலை மோதி விரட்டியுள்ளனர். இதனால் படகு சேதமடைந்துள்ளது. இதனை தொடர்ந்து உடனடியாக ராமேஸ்வரம் துறைமுகத்திற்கு மீனவர்கள் திரும்பியுள்ளனர். படகை காப்பாற்றுவதே பெரிய விஷயமாக உள்ளதாகவும், விரைவில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.