அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆதரவற்ற முதியவர்

திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆதரவற்ற முதியவருக்கு முறையான சிகிக்சை அளிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Update: 2018-09-13 07:21 GMT
தண்டராம்பட்டை சேர்ந்த ராமசாமி என்ற ஆதரவற்ற முதியவர் திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை மணிமாறன் என்பவர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். இதைத்தொடர்ந்து இரு நாட்களுக்கு பிறகு மீண்டும் முதியவரை சென்று பார்த்தபோது உரிய சிகிச்சை வழங்கப்படாததும், குடிநீர், உணவு கொடுக்கப்படாததும் தெரியவந்தாக மணிமாறன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக செவிலியர்களிடம் கேள்வி எழுப்பிய போது முறையான பதில் அளிக்கப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார். நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்