முகம் சிதைந்து பார்வை பறிபோன தாய் குரங்கு தனது குட்டியை காப்பாற்ற போராடும் அவலம்..!

திருச்சி முக்கொம்பு மேலணை பூங்காவில் முகம் சிதைந்து பார்வை பறிபோன தாய் குரங்கு ஒன்று தனது குட்டியை காப்பாற்றுவதற்காக படும்பாடு காட்சி அதை பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்தியது

Update: 2018-09-11 10:07 GMT
திருச்சி முக்கொம்பு மேலணை பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் கொடுக்கும் உணவை நம்பியே இந்த குரங்கு இருந்து வரும் நிலையில், அணை உடைந்ததால் முக்கொம்பு பூங்கா மூடப்பட்டுள்ளது. 

இதனால் தாய் குரங்கு தனது குட்டி குரங்கை சுமந்து கொண்டு உணவை தேடி அங்குமிங்கும் அலைவது பரிதாபமாக உள்ளது. எனவே, இந்த குரங்கிற்கு வனத் துறையினர் உரிய சிகிச்சை அளித்து காப்பாற்ற வேண்டும் என விலங்கு நல ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்