பேராசிரியர்களை வழக்கிலிருந்து தப்பிக்க வைக்க சதிகள் நடக்கிறது - பாலியல் புகாரளித்த மாணவி

திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூரில் உள்ள அரசு வேளாண் கல்லூரியில் பேராசிரியர் மீது பாலியல் புகார் அளித்த மாணவி விசாரணை முடியும்வரை அதே கல்லூரியில் படிப்பைத் தொடர தன்னை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2018-09-09 13:21 GMT
திருச்சியில் உள்ள ஒரு கல்லூரிக்கு மாற்றப்பட்டிருப்பதால், விசாரணையின்போது ஆஜராக சென்னை வந்து பெற்றோரை அழைத்துக்கொண்டு, மீண்டும் திருவண்ணாமலைக்கு வர வேண்டியிருப்பதாகவும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பேராசிரியர்களை வழக்கிலிருந்து தப்பிக்க வைக்கும் முயற்சிகள் நடைபெறுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்