திருவண்ணாமலையில் யோகேந்திர யாதவ் கைது..!

சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடும் விவசாயிகளை கருத்து கேட்க வந்த சுவராஜ் இந்தியா கட்சி தலைவர் யோகேந்திர யாதவை திருவண்ணாமலை மாவட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-09-08 14:10 GMT
திருவண்ணாமலையில் விவசாயிகளின்  கருத்து கேட்க வந்த சுவராஜ் இந்தியா கட்சி தலைவர் யோகேந்திர யாதவை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 

இது தொடர்பாக யோகேந்திர யாதவ் தமது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்  விவசாயிகளை சந்திப்பதை போலீசார் தடுத்ததுடன் செல்போன்களை பறிமுதல் செய்துள்ளதாக பதிவிட்டுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடந்தது என்ன? என விளக்கம் அளித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்