அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா : ஆளுநர் பன்வாரி லால் பங்கேற்பு

சென்னை தரமணியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.

Update: 2018-09-08 11:58 GMT
சென்னை தரமணியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில்  நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். 

விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி சாரட் அரவிந்த், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். விழாவில்  2015, 2016, 2017 ஆண்டுகளில் பட்டம் முடித்த மாணாக்கர்களுக்கு ஆளுநர் பன்வாரி லால் வழக்கறிஞர் பட்டங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி சாரட் அரவிந்த் ஆங்கிலத்தில் தேர்வுகள் முறையாக நடைபெறுவதில்லை என்றார். 

விழாவில், ராஜா தேவன் என்ற ஒய்வு பெற்ற ஐ.பி.எஸ் காவல்துறை அதிகாரி சட்ட படிப்பில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கல்வியின் ஆர்வம் காரணமாக சட்டம் படித்து பேராசிரியர் வழக்கறிஞர் என முக்கிய இலக்கை அடைந்தது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்