முக்கொம்பு மேலணையை முற்றுகையிட சென்ற பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கைது

திருச்சி முக்கொம்பு மேலணையை முற்றுகையிட இருசக்கர வாகனங்களில் சென்ற பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் தஞ்சை அருகே கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-09-08 11:36 GMT
காவிரி நீர் கடைமடை பாசனத்திற்கு வராததை கண்டித்து, முக்கொம்பு மேலணை முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பங்கேற்பதற்காக  விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் மன்னார்குடியில் இருந்து முக்கொம்பு நோக்கி சென்றனர். அவர்களை தஞ்சையை அடுத்த கீழவஸ்தாசாவடி அருகே போலீசார் தடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அனைரும் கைது செய்யப்பட்டனர். இதேபோல் மேலணையை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் 36 பேரை குண்டுகட்டாக தூக்கி சென்று போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்